ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே! 

ஓம் தத் சத் ஜ்யோதிர் அரவிந்த!

 

Obedience - to learn to obey good.,

Obedience - to obey The Divine is better. - The Mother.

 

என் தலைவனே! திவ்விய அன்பின் மூர்த்தியே! நீ நிரந்தர வெற்றி கொள்பவன், நின்னில் முற்றிலும் ஈடுபட்டோருக்கும், உன்னாலும் உனது பொருட்டாகவும் வாழ்வோரு க்கும், எல்லா வெற்றிகளும் கிட்டும். மிக உயர்ந்த சக்தி உன்னிடம், முழுமையாக பற்றற்று இருத்தலின் சக்தி உன்னிடம், நிர்மல சிருஷ்டியின் சக்தி உன் னிடம், சர்வ பூத ஹிதத்தின் சக்தி உன்னிடம்...,

 

உன்னிடத்திலும், உனது அருளினாலுமே அனைத்தும் திரு உரு பெற்று மாண்புறுகின்றன. எல்லா ரகசியங்களுக்கும், சக்திகளுக் கும் திறவுகோல் உன்னிடமே உள்ளது. உன்னுள் வாழ்ந்து, உனக்கு மட்டும் சேவை புரிந்து, உன் காரியம் வெற்றி பெறுவதற்கும், அதி கம் பேர் உயர்வு அடைவதற்கும் உழைப்பதையே வேண்டுபவர்கள் மட்டுமே உன் னை அடைய முடியும்.

 

எனது இறைவனே! நீ ஒருவனே நிலையானவன்! மற்றவை எல்லாம் மாயை. உன்னிடத்தில் நிலை பெற்றவர்கள் எல்லாவற்றையும் கண்டு அறிகின்றார்கள். பேரறிவுக்கு எட்டாதது எதுவும் இல்லை. பேரறிவின் பார்வையில் அனைத்தும் வேறுவிதமான தோற்றம் அளி க்கின்றது. ஏனென்றால் சாரத்தில் அனைத்தும், அனைத்திலும் நீயே! அனைத்தும் உனது செயலின் விளைவே ஆகும்.

 

பரம கருணை உள்ள உனது தலையீட்டின் விளைவே இவை அனைத்தும் ஆகும். மிக பயங்கரமான கார் இருளில் நீ ஒர் ஒளி பொருந்திய நட்சத்திரத்தை தோற்றுவித்து இருக்கிறாய் அல்லவா! எங்களது பக்தி என்றும் வளர்ந்த வண்னம் இருக்கட்டும். எங்கள் ஆத்ம சமர்ப்பணம் முழுமை பெறுவதற்கு எப்பொழுதும் முன்னேறிய படி இருக்கட்டும்.

 

என்றுமாய், ஆண்டவனாய் நிலைபெற்று இருக்கின்ற நீ, நடை முறையில் எங்கள் வாழ்க்கையிலும் ஆண்டவனாக அருள் செய்வயாக!

  ஸ்ரீஅன்னை.   19 ஜனவரி  1914. தியானமும் பிரார்த்தனையும்.

\

சிந்தனைப் பொறிகள்.

முதல் கடமை.

 

மனித இனத்திற்கு தனது வாழ்வை ஒழுங்காக அமைத்துக் கொள்ளும் திறமை இல்லை என்பது நன்கு நிரூபணம் ஆகிவிட்டது. எத்தனை அரசுகள் வந்து போய் இருக்கின்றன? எத்தனை ஆட்சி முறைகள் வந்து சென்றுள்ளன? எத்தனை நூற்றாண்டுகள் கடந்து போய் இருக்கின்றது? ஆயினும் மனிதனுடைய அவல நிலை மாறி இருக்கின்றதா?

 

மனிதன் இன்று இருப்பதைப் போல ஆன்மிக உண்மைகளை உணராமல், அதற்கு கத வை அடைத்துக் கொண்டு, குருடனாக அஞ்ஞான இருளில் இருக்கும் வரை அவனுக்கு விமோசனம் இல்லை. மனித உணர்வு ஒளி பெற்ற போதுதான், திவ்விய மாற்றம் அடை யும் போதுதான் மனித இனத்தின் உண்மையான முன்னேற்றம் ஏற்பட முடியும்.

 

ஆகவே மனித வாழ்வினை, அதன் உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் மனித னின் முதல் கடமை தெய்விக உணர்வைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு அதனைப் பெறு வதே ஆகும்.

\

 

ஆன்மாவின் முக்தி நிலையை ஒருவன் உணர்ந்து இருக்கிறான் என்றால், தனக்குள் பூரண சுதந்திரம் உள்ளதாகவும், மனிதர்களின் வாழ்வுச் சூழ்நிலைகளில் இருந்து தனிப்பட்டு இருப்பதையும், துக் கம், அதிருப்தி, கோபம் முதலியனவற்றால் தீண்டப்படாமலும், எப் பொழுதும் அமைதியுடனும், நிறைவுடனும் இருக்கின்ற ஒரு பொருள் (ஆன்மா) இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு அவன் தனது ஆன்மாவை உணர்ந்து கொண்டு இருக்கிறான் என்பது பொருளாகும்.

 

இந்த மெய் உணர்வு திடீரெனவும் வரும் அல்லது படிப்படியாகவும் வரலாம். சிறிது காலமே இருக்கலாம் அல்லது மிக நீண்ட காலத்தி ற்கு நிலைத்து இருக்கலாம். அந்த உணர்வானது நிலைத்து இருப் பதுதான் இலட்சிய நிலை ஆகும்.

 

ஆனால் இத்தகைய உணர்வானது, உனது உடல் பாகங்கள் எல் லாம் வெளியே உள்ள உணர்வுடன் திரும்பி கட்டுண்டு கிடப்பதற்கு பதில் உன் அந்தராத்மாவை நோக்கித் திரும்பும் போதுதான் வரும். இந்த அற்புதமான மாற்றத்தைப் பெறுவதற்குச் சிறந்த வழி என்ன வென்றால், நாம் உள் நோக்கிச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.

 

இவ்வாறு உள்நோக்கிச் செல்லவதற்கு நாம் வசதியாக உடலை இருத்திக் கொண்டு அல்லது படுத்துக் கொண்டு நம்மைச் சுற்றி நிகழ்பவை, மனிதர்கள், பொருட்கள் மற்றும் நாம் எண்ணுபவை, நாம் செய்ய நினைப்பவை ஆகிய எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு இருக்கும் நமது உணர்வு இழைகளை பின்னால் இழுத்து கொண்டு வந்து ஒன்று கூட்டிச் சேர்த்தல் அவசியம்.

 

இவ்வாறு செய்த பிறகு உனது கவனம் முழுவதையும் உனக்குள்ளே அதாவது நெஞ்சின் ஆழத்தின் உள்ளே ஒருமுகப்படுத்திக் கொண்டு அசைவற்றதொரு சாந்தி நிலையை அடையும் வரை, அங்கே ஒருமுனைப்புடன் இருக்க வேண்டும். இது முதல் முயற்சி யிலேயே வெற்றி கிடைத்து விடாது, ஆனால் நீ வெற்றி கிடைக்கும் வரையில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

 

அந்த அமைதியான, மெளனமான அசைவற்ற ஒரு அற்புத நிலை யில் உன்னுடைய அந்தராத்மாவுடன் உனக்குத் தொடர்பு ஏற்படும். அப்படித் தொடர்பு கிடைத்ததும் அதனுடன் நீ இரண்டறக் கலந்து விடுவாய். அப்போதுதான் நீ விடுதலை பெற்று நிற்பதை உணர்வாய். இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்து வர வர இத்தகைய அனுபவ மானது மேலும் மேலும் எளிதாகவும் இயல்பானதாகவும் மாறி விடும்.

\

இறைவனது அருளுடன் கலந்து விடுதல்.

 

இறைவனது அருளே நம்மை எப்போதும் முன்னேற்றம் அடையச் செய்கின்றது. இறை வனது அருள் உனக்கு இருக்கும் பொழுது நீ இறை ஆனந்தத்தை அனுபவிக்கின்றாய். ஆனால் நீ என்ன செய்கி றாய் என்றால் உன்னை முன்னேறச் செய்யும் இறை அருளை ஏற்று அதனுடன் ஒன்றுபடாமல் இருப்பதுடன், நாம் விட்டு ஒழிக்க நினை க்கின்ற ஒரு இழிவான பொருளுடன் உன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்.

 

அப்படிச் செய்வதால் நீ துன்பத்தைப் பெறுவது இயல்பானதுதான்.  ஒரு மனிதன் சிறி தாவது மெய் உணர்வு பெற்றவனாக இருந்தால் இப்படி சோதித்துப் பார்க்கலாம். நாம் விரும்பாத ஒன்று, இழிவான ஒன்று நம்மிடத்தில் உள்ளது. அதனை ஏதோ ஒரு காரணத் திற்காக நீ விரும்பவில்லை, அதனை எடுத்தெறிய விரும்புகிறாய்.

 

ஆயினும், அப்படி விட்டு எறிய வேண்டிய ஒன்றுடன் நீ ஒரு சிறிதளவாவது ஐக்கியப் படுத்திக் கொண்டாலும், அதனைப் பிடுங்கி எறியும் போது உனக்கு அது வேதனையாய் இருக்கும். இதற்கு மாறாக, நமக்கு விடுதலை அளிக்க வருகின்ற தெய்விக சக்தியுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டால் அப்போது இறை ஆனந்தத் தை மட்டும் பெறுவாய்.

 

இதுவரை நீ செய்த முயற்சினால் கிடைத்துள்ள முன்னேற்றத்தின் பயனையும், அற்புத ஆனந்தத்தையும் அனுபவிப்பாய். ஒருவன் எதனு டன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான் என்பதற்கு இதுவே தலை சிறந்த அடையாளம் ஆகும்.

 

ஒருவன் கீழே இருந்து வருகின்ற சக்திகளுடன் ஒன்றுபட்டால் துன்பமே அனுபவிக்க வேண்டும். ஆனால் மேலே இருந்து வரும் தெய்விக சக்திகளுடன் இரண்டறக் கலந்தால் பெரும் மகிழ்ச்சி யைப் பெறலாம்.

     ஸ்ரீஅன்னை.                    வைகறை 4 - 1993.

\

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கின்றது - பழமொழி.

Obedience - To learn to obey is good.,

Obedience - To obey only the Divine is better – The Mother.

இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற்றையும் விட மேலான நிலையாகும்.  பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

 

Obedience - give success.,

Obedience - obey only the truth.,

Obedience - gives peace, progress, prosperity etc.....

Detailed Obedience
                                  The obedience to the Divine Will
                                  must be total. 
 

Perfect Obedience
                                   Without reserve or hesitation,
                                    joyous obedience in every sphere
                                   to the command of   the Divine.
 

The Importance of Obedience

"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother.

"Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth.

In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo. 

Obedience.in explains

The Mother - Bagavan Sri Aurobindo's teachings,

Art of Sucessful Living,

Social Welfare, Progress to All.....

\

இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ அரவிந்தர் -   ஸ்ரீ அன்னையின் கருத்துக்கள் மற்றும் படங்கள் அனைத்தும், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.