|

ஸ்ரீ அரவிந்த அன்னை.
ஓம் ஆனந்த மயி!
சைதன்ய மயி! சத்தியமயி பரமே!
ஓம் தத் சத் ஜ்யோதிர் அரவிந்த!
Obedience - to learn to obey good.,
Obedience - to obey The Divine is better. - The Mother.
மலர் போல மலர்கின்ற
மனம் வேண்டும் தாயே! பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
எங்கள் தலைவனே!
மக்களின் மூடிய கண்களைத்
திறந்து, அவர்களின் இருண்ட அறிவை தூய்மைபடுத்தி, அவர்களின் வீண் கவலைகளையும்,
பயனற்ற துன்பங்களையும் நீக்கி அவர்கள் அனைவருக்கும் ஒளி யையும்,
சாந்தியையும் அருள்வாய்.
எப்போதும் தங்களைப் பற்றியே
நினைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் இருந்து மக்களை விடுவித்து, எவ்வித
இலாப நஷ்டத் தையும் கருதாது உனது திருப்பணியில் ஈடுபடும் இன்பத்தை
அவர்களுக்குத் தருவாயாக!
களங்கமில்லாத தூய்மையிலும்,
சாந்தியிலும் எங்குமாய் நீ நிறைந்து வெளிபடும் வரை, அனைத்திலும் எங்கும்
உனது எழில் மலர்ந்து, எல்லோர் உள்ளத்திலும் இறைசக்தி உதயமாகி, இம்
மாநிலத்தில் முடிவு இல்லாமல் வளரும் நின் தருமம் பெருகிக் கொண்டு
இருக்கட்டும்.
துயரமெல்லாம்
துடைக்கப்படட்டும், துன்பங்கள் எல்லாம் தீர்ந்து போகட்டும், வேதனை எல்லாம்
மறையட்டும், மக்கள் உள்ளங் களில் அமைதியான நிம்மதி குடி புகட்டும், மக்கள்
மனம் நிலை த்த உறுதி பெற்று வலுவடையட்டும், அனைவரும் உன்னை நோ க்கி ஆழ்ந்து
தியானித்து அதிலிருந்து வெற்றிக்கெல்லாம் மூலப் பொருளான சக்தியைப் பெறட்டும்.
நீ ஒவ்வொருவரிடத்திலும்
உயிரளிக்கும் ஊற்றாய் ஊடுருவிப் பாய வேண்கிறேன்.
ஸ்ரீஅன்னை.
7 ஜனவரி 1914. தியானமும் பிரார்த்தனையும்.

சிந்தனைப்
பொறிகள்.
பலவிதமான
தெய்வீகத் தொடர்புகள்.
ஆன்ம
அனுபவத்தில் ஒருவருக்கு பலவிதமான காட்சிகள் ஏற்படும். மேற்போக்கான பல
காட்சிகளும் உண்டாகும். இத் தகைய காட்சிகளின் போது நாம் பார்க்கின்ற தெய்வ
உருவத் தை கணநேரம் அல்லது மிகவும் குறைந்த காலத்திற்கு பார்க்க முடியும்.
அது
சமயம் நம்முள்ளே இருக்கும் பக்தியானது இதனை கருவியாகப் பயன்படுத்திக்
கொள்ளாவிட்டால், இவை போன்று நிகழும் காட்சிகளால் எவ்விதமான பயனும் மாறுதலும்
இல்லை. உயிருள்ள தெய்வத்தின் வடிவை அதன் ஒரு உருவில் தனக்குள் அதாவது
இதயத்தினுள் ஏற்கும் அனுபவம் ஒன்று உண்டு.
இதனால்
நமக்கு உடனடியாகப் பயன் கிடைக்கும். அது நமது ஆன்மிக வளர்ச்சியில் ஒரு படி
முன்னேற ஒரு வாய்ப்பாகவும் அமையும். இது தவிர தெய்வ வடிவத்தை வெளியில்
அதாவது நம்மைப் போல் தூல உருவிலோ அல்லது சூட்சும வடிவத்திலோ காணவும்
முடியும்.
ஆன்மிக
அனுபவத்தின் போது நம்முள்ளே ஏற்படுவது (மிலனம்) நிலையான ஐக்கியம் ஆகும். இது
எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புற மிலனம் பொதுவாக நிலை த்து இருப்பது
இல்லை. பூஜை செய்யும் சமயங்களில் அடிக்கடி தெய்வத்துடன் தொடர்பு கொள்பவர்கள்
அல்லது எப்போதும் தெய்வத்துடன் தொடர்பு கொண்டவர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள்
வழிபடும் படத்தில் அல்லது சிலையில் தெய்வம் உயிர் கொண்டு விளங்கலாம். இது
தவிர தெய்வம் புறப்பொரு ளாக சூட்சும வடிவில் எப்போதும் காட்சி அளிப்பதை,
தாங்கள் வசிக்கும் இடம் அல்லது பூஜை அறையில் இருப்பதை உணர முடியும். ஆயினும்,
சில சமயங்களில் குறுகிய காலத்திற்கு மட்டுமே அவ்வாறு நிகழும்.
ஒருவன்
தெய்வ சாந்நித்யம் தன்னுடன் இருப்பதை உணரலாம். அத்தெய்வத்தை உடலுடனும்
காணலாம். ஆயினும் முழுமையாக நம்மைப் போல் பரு உடலில் காண்பது என்பது மிகவும்
அரிதா கவே இருக்கும். அத்தெய்வ உருவம் தங்களைத் தொடுவதையும், தழுவிக்
கொள்வதையும் உணர முடியும். அது மட்டுமல்ல இடை விடாமல் அதனுடன் பேசவும்
செய்யலாம், இதுவும் ஒருவகை மிலனம்தான்.
தெய்வம்
தன்னுள்ளும், உலகில் உள்ள அனைத்திலும் இருப்ப தையும், உலகம் முழுமையையும்
தன்னுள்ளே கொண்டு இருப்ப தையும் உலகுடன் ஒன்றாகவும் அதே வேளையில் எல்லாவற்றை
யும் முற்றிலும் கடந்ததாகவும் இருப்பதை இடைவிடாமல் உணர் வதே அனைத்திலும்
உயர்ந்த வகையான (நிலைத்த ஐக்கியம்) மிலனம் ஆகும்.
அப்போது
இறைவனை உலகத்தைக் கடந்தவனாகக் கண்டபோதி லும், உலகினுள்ளும் அவனையே
காண்கிறான். அவனையே கேட்கிறான், அவனையே உணர்கிறான். அவனையன்றி வேறு எதுவும்
இல்லை. இருப்பினும் தனிப்பட்ட சிலருக்குக் காட்சி தருவதைப் போல இறைவனால்
வெளிப்படவும் முடியும். எவ்வ ளவு அதிகமான வழிகளில் ஐக்கியம் ஏற்படுகின்றதோ
அந்த அளவிற்கு நன்மையும் ஏற்படும்.

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித் தளமாக இருக்கின்றது -
பழமொழி.
Obedience - obey only the truth.,
Obedience - give success.,
Obedience - gives peace, progress, prosperity etc.....
இறைவனின்
வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது
என்பது எல்லாவற் றையும் விட மேலான நிலையாகும்.
பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

Detailed Obedience
The
obedience to the Divine Will
must be total.
Perfect Obedience
Without
reserve or hesitation,
joyous obedience in every sphere
to the command of the Divine.
The
Importance of Obedience
"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee
alone and live according to Truth." - The Mother.
"Obedience is necessary so as to get away from
one's own mind and vital and learn to follow the Truth.
In yoga obedience to the Guru or to the Divine
and the law of the Truth as declared by the Guru is the foundation of
discipline."
-
Sri Aurobindo.
Obedience.in explains
The Mother - Bagavan Sri Aurobindo's teachings,
Art of Sucessful Living,
Social Welfare, Progress to All.....

இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின்
கருத்துக்கள் மற்றும் அனைத்தும்,
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதி யுடன்
வெளியிடப்படுகிறது.
இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது பணிவான
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

|