.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே! பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!

 

Obedience - to learn to obey good.,

Obedience - to obey The Divine is better. - The Mother.

 

Without Grief - கவலையற்று இருத்தல்.

கவலை இல்லாத மனிதன் என்று இவ்வுலகில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான கவலை இருக்கின்றது. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் போது ஏமாற்றம் அடைந்தால் கவலை உண்டாகிறது. நினைத்தது நடக்காவிட்டால், கேட்டது கிடைக்காவிடில் ஆசைப்படுவது நடக்காமல் போகும் போது துன்பம், மன வேதனை ஏற்படுகின்றது.

இதனைத் தாண்டி வருவது எப்படி? என ஒவ்வொரு மனிதரும் வழி அறியாமல் குழம்புகின்றனர். துயரத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். எல்லா உயிர்களும் இன்பமுடன் வாழ வேண்டும் என்றே இறைவன் விரும்புகிறான். அதற்காக மனிதன் அறியாமையால் செய்யும் செயல்களால் ஏற்படும் வேதனைகள், கவலைகளில் இருந்து விடுபட்டு நலமுடன் ஆனந்தமாக வாழ நல்ல வழியையும் காட்டி இருக்கின்றான்.

''பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும்போதும் அழுகின்றான், ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!'' என ஒரு கவிஞன் அழகாக மனிதரின் நிலையைப் பாடிச் சென்றுள்ளான். சிரிக்க வும், கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவும் வழி இருக்கும் போது நாம் ஏன் இன்னும் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கவேண்டும்?

ஆனந்தமயமான நல்வாழ்வுக்கு உறுதுணையாக ஸ்ரீஅன்னை மனிதகுலத் திற்கு நல்லதொரு வழிகாட்டி அருள் செய்கின்றார். மலர் வழிபாட்டின் மூலம் இழந்த சந்தோஷத்தை நாம் முழுமையாகப் பெற்று இன்பமுடன் வாழ உதவுகின்றார். ஸ்ரீஅன்னை மலர்களின் மூலம் உலகியல் வாழ்வின் துன்பங்களைப் போக்க முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

அத்துடன் இறை அருளையும் பெற்று உயர்நிலையையும் பெறலாம் என அறிவுறுத்துகின்றார். மேலும் அவர் நமது கவலையை எல்லாம் நீக்கி ஆனந்த வாழ்வு பெற அற்புத சக்தி பெற்ற மலர் ஒன்றைக் குறிப்பிட்டு வழி காட்டுகின்றார்.

அந்த மலரைத் தருகின்ற மரத்தின் தாவரவியல் பெயர் சரகா இண்டி கா என்பது ஆகும். இதனை அசோக மரம் என்று இந்தியாவில் அழை ப்பார்கள். சோகம் என்றால் கவலை, நிம்மதியின்மை என பொருள் படும். அசோகம் என்றால் இவை எதுவுமே இல்லாமல் ஆனந்தத்துடன் இருப்பதாகும். மகிழ்ச்சி தரும் மரம் எனவும் குறிப்பிடுவார்கள்.

இத்தாவரத்தில் தோன்றும் மலருக்கு கவலையே இல்லாத ஆனந்த நிலை என்ற ஆன்மிகப் பெயரிட்டு ஸ்ரீஅன்னை அழைக்கின்றார். இறைவனைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து வந்தால் கவலை மட்டுமல்ல வேதனை, துன்பங்களற்ற ஆனந்த நிலையை உருவாக்கிக் கொடுக்கும் என இதற்கு ஸ்ரீஅன்னை விளக்கம் தருகின்றார்.

நாம் பாண்டிச்சேரியில் உள்ள பகவான் ஸ்ரீஅரவிந்தரின் ஆசிரமத்திற் குள் செல்லும் போது அதன் வாயிலின் இடது பக்கத்தில் ஒரு மரம் காணப்படுகிறது. அது எப்பொழும் பசுமையுடன் இருக்கின்ற பல கிளைகளுடன் படர்ந்து அடர்ந்து இலைகளால் நிரம்பப் பெற்று கிரீடம் அமைத்தது போல  இருப்பதைக் காண முடியும்.

இதில் தோன்றும் மலர்களானது மிகவும் அழகாக அடர்ந்த இலைகளுக்கிடையே காணப்படும். பொன்னிறமுடைய மணம் நிரம்பிய மலர்கள் கொத்துக்களாய் ஆர ஞ்சு, சிவப்பு நிறம் கலந்த நீண்ட தண்டு களுடன் இருக்கும். அசோக மரத்தைப் பற்றி பலதரப்பட்ட புராண இதிகாசக் கதைகள் இந்து மற்றும் புத்த மதங்களில் கடவுளுடன் தொடர்புடையதாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பல கோவில்க ளில் இருக்கும் பாறை சிற்பங்களில் அசோக மரமானது செதுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

இராவணன் சிறை பிடித்து வந்த சீதையை அசோகவனத்தில் சிறை வைத் தான். அவரைத் தேடி வந்த அனுமன் இலங்கையில் சந்தித்த பொழுது சீதை அசோக மரத்தின் கீழ் இருந்தாள் என இராமாயணம் குறிப்பிடுகின் றது. அசோக மரத்தின் நிழலில் இருந்த சீதையிடம் இராமரின் மோதிரத் தைக் காட்டி, அவரது செய்தியைச் சொல்லிய அனுமன் இனி வரும் போரில் வெற்றி பெற்று அவரை சிறை மீட்போம் என்ற நம்பிக்கையை விதைத்தான்.

இம்மரத்தில் தோன்றும் மலர்களை அசோக மலர் என்று அழைப்பார்கள். ஸ்ரீஅன்னை கவலைகள் அற்ற ஆனந்த நிலை என இம் மலரை ஆன்மி கப் பெயரால் அழைக்கின்றார். இந்த இரண்டுமே ஒரே பொருளில்தான் அமைந்து இருக்கின்றது. இது போல தனிச் சிறப்புடன் இருக்கும் மலர்கள் வெகு சிலவே ஆகும்.

அசோகமரமானது பெரும்பாலும் இணையாக அடுத்தடுத்து தானாக வளர் ந்து காணப்படும். இந்தியா, பர்மா, இலங்கை மற்றும் மலேசியா முதலான நாடுகளில் பசுமை மாறாக் காடுகளாக வளர்ந்து காட்சி அளிக்கின்றன.

அசோக மரமானது பல நாடுகளில் பரவி காணப்பட்டாலும் இந்தியாவை தாயகமாகக் கொண்டுள்ளது. இதில் 6 முதல் 10 அங்குல நீளமுடைய இளம் சிவப்பு அல்லது ரோஜா நிறமுடைய விதைப் பையில் 4 முதல் 6  பழுப்பு நிறமுடைய எண்ணெய்ப் பசையுள்ள விதைகள் இருக்கும். இந்த விதைப் பையானது வளர வளர பச்சை நிறத்திற்கு மாறி இறுதியில் பழுப்பு வண்ணமாகி விடும். இந்த விதைகளை நட்டு வைத்தால் அவை எளிதாக வளர்ந்து இனப் பெருக்கம் செய்து கொள்ளும்.

அசோக மரம் பல மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளது. இம்மரத்தின் பட்டைகளில் இருந்து எடுக்கப்படும் கஷாயமானது கட்டுப்படுத்த இயலாத மாத விடாய் போக்கிற்கு பயன்படுகின்றது. மேலும் உள் பகுதியில் இருக் கும் மூல நோயைக் கட்டுப்படுத்தவும் மருந்தாக பயன்படுகிறது. அசோக மரத்தின் பூக்களைப் பறித்து தண்ணீருடன் கலந்து அரைத்து உருவாக் கப்படும் மருந்து வயிற்றுப்போக்கு நோயை குணப்படுத்த உதவுகிறது. அது தவிர இதனை தேள் கடிக்கு உரிய மருந்தாகவும் உபயோகிக்கின்றார்கள்.

 "தவறான வழி நடத்துதலில் இருந்து விடுபடுவது எப்படி? எல்லாக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு எல்லாவற்றிலும் இன்பத்தை - இறைவனைக் காண்பது எப்போது? 

எனது வாழ்நாளின் முந்தைய காலங்களை திரும்பிப் பார்க்கும் போது நான் ஒரு போதும் தோல்வி அடையவில்லை, எதற்கும் கவ லைப்படவும் இல்லை. நான் எப் பொழுது இறைவனுடைய  ஆசி யை இழக்கின்றேனோ, அவ்வே ளையில் இருந்து கவலையை யும், தோல்வியையும் சுமப்பேன். பேராபத்து நேரிடும் என்ற மனக் குழப்பத்தில் இருப்பேன்.

ஏனெனில் நம்மால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது, ஆனால் ஒரு உண்மை நம் முன்னால் இருக்கிறது, எனவே நாம் இவற்றால் பெரும் கூச்சலையும், மூச்சுத் திணறலையும் அனுபவிப்போம்'' அறிவில்லாத இதயமே அமைதியாய் இரு! நான் எனும் கர்வத்தை கொன்று விடு! மிகப் பெரியதை, அறியவும், பிரபஞ்சதைப் போல விரிவடையவும் கற்றுக் கொள். அதனை அறிந்து உணர்ந்து கொள்!

 வேதனை மற்றும் கவலைகளில் இருந்து மிக சந்தோஷமான நிலைக் குச் செல்வதையும், தோல்வியில் இருந்து முழுமையான பயன் பெறக் கூடிய நிலைக்குச் செல்வது எப்படி? என்ற உன்மையையும், மந்தமான நிலையில் இருந்து விரைவாக செயலாற்றும் தன்மையை அடையும் இரகசி யத்தையும் கற்றுக் கொள்ளும் போது இறைவனின் செயல்கள் எவ்வளவு சிறிய அளவில் இருப்பினும் அது மிகப்பெரும் பயன் தரும் என்பதை அப் போது உணர்ந்து கொள்வாய்'' என பகவான் ஸ்ரீஅரவிந்தர் விவரிக்கின்றார்.

இனிமையான எண்ணங்களினாலும், தூய்மையான செயல்களாலும் உயர்ந்த நிலையையும் முன்னேற்றத்தையும் பெற்று இறையருளில் எப்போதும் ஆனந்தமாக வாழ விரும்புபவர்கள் இம்மலரை கண்டறிந்து தினசரி வழிபாட்டில் பயன்படுத்தி வந்தால் விரைவில் மேன்மையான நிலையை அடையலாம். நல்முயற்சியும், நம்பிக்கையும் மாறாத வெற் றியையும், உயர்வையும் தேடித் தரும்.

ab

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கின்றது - பழமொழி.

ab

Obedience - obey only the truth.,

Obedience - give success.,

Obedience - gives peace, progress, prosperity etc.....

ab

இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற்றையும் விட மேலான நிலையாகும். பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

ab

Detailed Obedience
                                  The obedience to the Divine Will
                                  must be total. 

Perfect Obedience
                                   Without reserve or hesitation,
                                    joyous obedience in every sphere
                                   to the command of   the Divine.    

 The Importance of Obedience

"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother.

"Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth.

In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo.

ab

Obedience.in explains

The Mother - Bagavan Sri Aurobindo's teachings,

Art of Sucessful Living,

Social Welfare, Progress to All.....

ab

 

இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீஅரவிந்தர் ஸ்ரீஅன்னையின் கருத்துக்கள் மற்ற அனைத்தும், ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன்  வெளியிடப்படுகிறது.

 

இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக் கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

ab