முன்னோர்களின் மருத்துவ அறிவு.

 

நம் முன்னோர்கள் தங்கள் நூல்களில் பலவிதமான, பயன் தரக் கூடிய மருத்துவக் குறிப்புகளைப் பற்றி கூறியுள்ளனர். ஆயுர்வேதம் என்பது பாரத நாட்டின் மருத்துவம் ஆகும். இதனை ஒரு அறிவுச் சுரங்கம் என்றே கூறலாம். கி.மு.500ம் ஆண்டில் வாழ்ந்து வந்த சுஸ்ருதர் இவ்வுலகத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

 

சுஸ்ருத ஸம்ஹிதை என்னும் மிகச் சிறந்த மருத்துவ நூல் ஒன்றை இவர் எழுதி உள்ளார். இதில் அறுவை சிகிச்சை செய்வது எப்படி? அதில் உள்ள வகைகள் யாவை? என்பன போன்ற பல அரிய விளக்கங்களை எழுதி இருக்கின்றார். இவர் மருத்துவ அறிவியலை எட்டு தொகுதிகளாக பிரித்து ள்ளார். மேலும் அறுவை சிகிச்சை முறைகள் எட்டு வகைப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

 

தற்கால அறிவியல் மனிதனின் ஆரோக்கியக் குறைவுக்கு மன நலக் குறைபாடும் ஒரு காரணம் என்று கூறி வருகின்றது. இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் அறிந்து இருந்தனர். யோகம், ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை சரக ஸம்ஹிதை எனும் நூலில் விவரித்துள்ளார்.

 

தற்கால அறிவியல் வளர்ச்சியில் ஒன்றான சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறப்பதைப் பற்றி ரிக் வேதத்தில் 7:33:13 என்ற பகுதியில் காணப்படும் சுலோகங்கள் விவரிக்கின்றன. மற்றும் மகாபாரதத்தில் காந்தா ரிக்குப் பிறந்த கெளரவர்கள் 100 பேரும், ஒரே சகோதரியான துச்சலை என்பவளும் சோதனைக் குழாய் முறையில் பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. 

ab

 

சொல்லும் செயலும்.

 

புராணம் மற்றும் இதிகாசங்களில் வல்லவரான ஆன்மிகவாதி  ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தமது வாழ்நாள் முழுவ தும் புராண சொற்பொழிவுகளை ஊரெங்கும் சென்று நிகழ்த்தி வந்தார். வயது முதிர்ந்ததால் அவருக்கு இறுதி காலம் நெருங்கி யது. பெரியவர் மரணமடைந்த பின் அவரது ஆன்மாவை  அழைத்துச் செல்ல தூதுவர்கள் வந்தனர்.

 

அவர்களுடன் தாம் சொர்க்கத்திற்கு செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் அப்பெரியவர் சென்று கொண்டு இருந்தார். ஆயினும் அவரை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் நரகத் தில் கொண்டு போய் விட்டனர். இதனைக் கண்ட ஆன்மீகவாதி பெரும் கோபம் கொண்டார். தன்னை அழைத்து வந்தவர்களிடம், ''என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்'' என்று வினவினார்.

 

தங்களது கர்ம பலன்கள்களுக்கு ஏற்ப நீங்கள் இங்கு அழை த்து வரப்பட்டுள்ளீர்கள் என அவர்கள் பதில் அளித்தனர். இதை  கேட்ட அவருக்கு மேலும் கோபம் பொங்கியது. எனது ஆன்மி கப் பணியினால் உலக மக்கள் பலர் திருந்தி நல்வாழ்வு அடை ந்து இருக்கிறார்கள், அவர்களது வாழ்வு மேன்மை அடைய உதவிய எனக்கு நற்பலன்கள் ஏதும் இல்லையா? என்று வேகத் துடன் கேட்டார்.

 

இதற்கு, ''அய்யா! நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களால் வழிகாட்டப்பட்ட பலரும், உங்களது சொற்பொழிவைக் கேட்ட பலரும் மனம் திருந்தி தங்கள் வாழ்வை தூய்மைப்படுத்திக் கொ ண்டு வாழ்ந்து மேல் நிலை அடைந்து இருக்கின்றனர். அவர்க ளில் பலரும் தமது ஆயுள் முடிந்த பிறகு சொர்கத்திற்கு சென்று இன்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

 

ஆனால் உங்களது நிலை அப்படி அல்ல! நீங்கள் சொற்பொழி வாற்றியதை ஒரு தொழிலாகச் செய்து வந்தீர்கள். அதற்கேற்ப கூலியையும் உடனடியாக பெற்றுக் கொண்டு உள்ளீர்கள். மேலும் நீங்கள் பல நல்ல, அறவழியில் வாழக் கூடிய கருத்துக்களை உலக மக்களுக்கு  கூறி வந்தாலும் அதன்படி நீங்கள் மனமாற்ற மடையவும் இல்லை, அப்படி வாழவும் இல்லை.

 

எனவே உங்களது கர்மவினையின்படி நீங்கள் இங்கு வந்து இருப்பது சரிதான்'' என பதில் உரைத்தனர். அதைக் கேட்டதும் அப்பெரியவருக்கு உண்மை நன்றாக விளங்கியது. நல்ல கருத்து க்களை கூறுவது என்பது வேறு, அதன்படி வாழ்ந்து உயர்வு பெறுவது என்பது வேறு என்ற பேருண்மை புரிய வந்தது.

 

தமது செயலுக்கேற்ற பலனைத்தான் இறைவன் அளித்துள்ளான் என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் மனம் அமைதி பெற்று அடங்கி விட்டார். அறிவுறை கூறுவது என்பது எளிது, அதன்படி வாழ்வதே உயர்வானது என்பது இறைவனின் தீர்ப்பு.  

 ab

 

விடைபெறும் வேளை

 

உன் கண்னீர் என் கண்களில்

என் புன்னகை உன் உதடுகளில்

போய் வா அன்பே..!

இடம் மாறிப் போகின்றோம்

இதயங்களை

மாற்றிக் கொள்ளாமல்...

 

என்ன உனக்கு எழுதிக் கொடுப்பது

என்னையே எழுதிக் கொடுத்த பிறகு...

 

நினைவுப் பரிசு எதற்கு?

உன் நினைவே பரிசு எனக்கு...

 

நாம் பேசிக் கொள்ளாமல்

இருந்த அந்த நாட்கள்

நம்மைப் பற்றி

பேசிக் கொள்கின்றன இப்போது...

 

பூக்கள் பறிப்பதற்கல்ல! என்று புன்னகைப்பவளே

புரிந்து கொள் இதயங்களும் எரிப்பதற்கு அல்ல..

எந்தத் திருவிழாவிலாவது

சந்தித்துக் கொள்வோம் மீண்டும்

காணாமல் போவதற்கு..

 

மகிழ்ச்சியான தருணங்களில்

தனியே சிரித்துக் கொள்!

சோகம் வரும் போது மட்டும்

சொல்லி அனுப்பு..!

தூங்கிக் கொண்டு இருந்த

காதல் விழித்தெழுந்த போது

விடைபெறும் வேளை.

ab

ab

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித் தளமாக இருக்கின்றது - பழமொழி.

ab

Obedience - obey only the truth.,

Obedience - give success.,

Obedience - gives peace, progress, prosperity etc.....

ab

இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற்றையும் விட மேலான நிலையாகும். பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

ab

Detailed Obedience
                                  The obedience to the Divine Will
                                  must be total. 

Perfect Obedience
                                   Without reserve or hesitation,
                                    joyous obedience in every sphere
                                   to the command of   the Divine.    

 The Importance of Obedience

"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother.

"Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth.

In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo.

ab

Obedience.in explains

The Mother - Bagavan Sri Aurobindo's teachings,

Art of Sucessful Living,

Social Welfare, Progress to All.....

ab

 

இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீஅரவிந்தர் ஸ்ரீஅன்னையின் கருத்துக்கள் மற்ற அனைத்தும், ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன்  வெளியிடப்படுகிறது.

 

இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக் கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

ab