|
| ||||||||||
|
Obedience - to learn to obey good., Obedience - to obey The Divine is better. - The Mother. தகவல் பலகை. பிப்ரவரி 15. மெய்யியலாளர் சாக்கிரட்டீஸ் கிமு. 399ல் மரணதண்ட னை பெற்றார். யூ டியூப் சேவை 2005ல் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரி 16. புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ 1959 ஜனவரி1 கியூபாவின் புதிய தலை வர் ஆனார். 2000 ஆம் ஆண்டு தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் 2007ல் அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது. பிப்ரவரி 17. நியூஸ்வீக் முதலாவது இதழ் 1933ல் வெளிவந்தது. சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற் தடவையாக 1936ம் ஆண்டு சித்திரக் கதைகளில் தோன்றினார். பென்சில்வேனியாவில் 1996ல் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம் டீப் புளூ கணினியை வென்றார். பிப்ரவரி 18. இந்தியாவில் 1911ல் முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை அலகாபாத்தில் ஆரம்பமானது. முதற் தட வையாக 1929ல் ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. கிளைட்டொம்பா 1930ம் ஆண்டு ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கை யில் புளூட்டோவைக் கண்டு பிடித்தார். தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக 1979ல் பனி மழை பெய்தது.
முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் எனப்படும் வடசேரி ஐயம்பெரு மாள் சுப்பிரமணியம், பிப்ரவரி 18, 1926ல் பிறந்தார். இவர் ஓர் சிறந்த மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார். பிப்ரவரி 19. சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை 1986ல் விண்ணுக்கு ஏவியது. உ. வே. சாமிநாதையர் பிப்ரவரி 19,1855ல் பிறந்தார். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதை யர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா என அழைக்கப் பட்டார். இவர் ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்து போகும் நிலை யிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சி ட்டு பதிப்பித்தவர்.
பிப்ரவரி 20. ஜோன் கிளென் 1962ல் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதல் அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார். அப்ப லோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற் றிகரமாகப் படம் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் 1965ல் சந்திரனுடன் மோதியது.
பிப்ரவரி 21. நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் 1804ல் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் 1848ல் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். உலகில் மிச்சமிருந்த கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை 1918ல் சின்சினாட்டியில் இறந்தது. முதலாவது பறக்கும் தானுந்து 1937ல் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது. எட் வின் லாண்ட் 1947ல் முதல் உடனடி படம் பிடிக்கும் கருவியை நியூ யார்க் நகரில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் அனைவராலும் பராசக்தியான ஸ்ரீஅன்னை என்றே போற்றி வழிபடப்படுகின்றார். உலகெங்கும் இவரது சீடர்கள் நிறைந்து இருக்கின்றனர். சமய, இன, மொழி வேறுபாடுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்பிய ஸ்ரீஅன்னை ஸ்ரீஆரோவில் நகரை நிர்மாணித்தார். வாழ்நாள் முழுவதும் மனிதகுலம் மேம்பாடு அடைய வும், எல்லா உயிர்களும் தெய்வீக வாழ்வு பெறவும் அயராது பாடுபட்டு வந்தார். ஆதிசக்தியான ஸ்ரீஅன்னை 1973ம் வருடம் நவம்பர் 17ம் நாள் தெய்வீக சமாதி அடைந்தார். புரட்சி நடிகர் எனப்படும் எம்.ஆர்.ராதா 1907ம் ஆண்டு சென்னை யில் பிறந்தார். புரட்சி, சமுதாய மறுமலர்ச்சி கருத்துக்களை தமது நாடகம் மற்றும் திரைப்படங்கள் மூலம் சொல்லி வந்தார்.
பிப்ரவரி 22. ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு 1961ல் காங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது. பிரிட்டிஷ் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை 2006ல் கெண்ட் நகரில் நடந் தது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர். பிப்ரவரி 23. பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு 1894ல் பாரிசில் அமைக் கப்பட்டது. பத்திரிசு லுமும்பா 1960ல் காங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
பிப்ரவரி 25. மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி 1988ல் ஏவப்பட்டது. ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி 12007ல் (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் சுற்றி வந்து அதன் சுழல் வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது. பிப்ரவரி 26. உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ, உலகின் முதலாவது இணைய உலாவியான நெக்சஸ்ஐ 1991ல் அறிமுகப்படுத்தினார். ஆப்கானிஸ்தானில் தலி பான் அரசு மிகப்பழமையான, வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டு புத்தர் சிலைகளை 2001ல் அழித்தது. பிப்ரவரி 27. சாக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி 1879ல் கண்டு பிடிக்கப்பட்டது. 1940ம் ஆண்டு ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டு பிடிக்கப்பட்டது. அயோத்தியாவிலிருந்து இரயிலில் வந்த 59 இந்துக்கள் கோத்ரா புகைவண்டி நிலையத்தில் 2002ல் முஸ்லிம் களால் எரிக்கப்பட்டனர். இதன் பின்னர் நடந்த மதக் கலவரத்தில் 1000 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டனர். பிப்ரவரி 28. வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் 1935ல் நைலான் கண்டு பிடிக்கப்பட்டது. தாய்வானில் 1947ல் அரசுக்கெதிராக நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 30,000 மக்கள் உயிரிழந்தனர். ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் 1953ல் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டு பிடித்ததாக அறிவித்தனர். தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28ம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ் பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளில் கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவரு க்கு கிடைத்தது. இதன் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது. மார்ச் 1. பயன்பாட்டிற்கு ஏற்ற முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் 1873ல் நியூயார்க்கில் தயாரித்தனர். ஹென்றி பெக்கெரல் 1896ல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் 1912ல் பாரசூட்டில் மூலம் குதித்தார். சோவியத்தின் வெனே ரா 3 விண்கலம் வீனஸ் கோளில் 1966ம் ஆண்டு மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை 1980ல் வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1934ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயக னாக அறிமுகமான இவர் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். அதில் 6 படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகும். 1944ல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனை யை பெற்றது. இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை குஞ்சராணி தேவி 1968ல் பிறந்தார். மார்ச் 2. அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய் யும் சட்டம் 1807ல் அமெரிக்க காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு, ஸ்ரீபெரும்புதூரில் 1823ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. யாஹூ 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப் பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்ப தாக 1998ல் கலிலியோ விண்கலம் தெரிவித்தது.- குன்னக்குடி வைத்தியநாதன் மார்ச் 2, 1935ல் பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். முதலில் செம்மங்குடி சீனிவாச ய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தினார். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் புகழ்ந்து குறிப்பிடப்படுகிறது. மார்ச் 3. டைம் இதழின் முதல் பதிப்பு 1923ல் வெளியிடப்பட்டது. சவுதி அரேபியாவில் 1938ம் ஆண்டு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா மார்ச் 13, 1839ல் பிறந்தார். இந்தி யாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். எஃகு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவரு டைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது. பாண்டித்துரைத் தேவர் மார்ச் 3, 1867ல் பாலவ நத்தம், தமிழ் நாட்டில் பிறந்தார். நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர் களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினார்.
மார்ச்
4.
பிரெஞ்சுக்
குடியரசு முழுவதும்
1794 முதல் அடிமைத்
தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது. கிரேக்க பைபிளின் 4ம்
நூற்றாண் டுக் கையெழுத்துப்படி
ஒன்று 1859ல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒலியை மிஞ்சிய
வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்"
ஏவுகணை 2007ல் ஒரிசா ஏவு
தளத்தில் இருந்து வெற்றிகரமாக
மார்ச் 6. ஒமார் கயாம் 1079ல் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். விண்ணுக்குச் சென்ற முதற் பெண்மணி, சோவியத் விண் வெளி வீரர், வலன்டீனா தெரெஷ்கோவா 1937ல் பிறந்தார். மார்ச் 7. கோல்டா மெயர் 1969ல் இசுரேலின் முதற் பெண் பிரதமரா னார். மக்கள் சீனக் குடியரசு 1989ம் ஆண்டு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர். மார்ச் 8. ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக் கான மூன்றாவது விதியைக் 1618ல் கண்டுபிடித்தார். அனைத்துலக மகளிர் தினம் 1911ல் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர் 1908ல் பிறந்தார்., அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இன்று பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க் கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். மன்னரின் சமாதானத்தை மக்கள் ஏற்காததால், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்ற னர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர் களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில்1911 ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி னர்! மார்ச் 9. ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா 1967ல் ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். சனியின் துணை கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் இருப்பது 2006ல் கண்டு பிடிக்கப்பட்டது. மார்ச் 10. அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். யுரேனஸ் கோளைச் சுற் றியுள்ள வளையங்களை 1977ல் வானியலாளர்கள் கண்டு பிடித்த னர். கோள்கள் அனைத்தும் 1982ம் ஆண்டு சூரியனின் ஒரு பக்கத் தில் வரிசையாக காணப்பட்டன. தமிழ்த் தேசியவாதியான பழ. நெடுமாறன் 1933ம் ஆண்டு பிறந் தார். இவர் தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற் றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிரு டன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பட்டம் சூட்டினார்.
மார்ச் 11. முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) 1702ல் லண்டனில் வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் 1958ல் அணுகுண்டு ஒன்றைத் தவறு தலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர். மார்ச் 12. 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை மாற்றி 1918ல் மாஸ்கோ தலைநகரானது. மும்பாயில் 1993ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். சாகித்ய அகாதெமி 1954ல் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ் வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. மார்ச் 13. வில்லியம் ஹேர்ச்செல் 1781ல் யுரேனஸ் கோளைக் கண்டு பிடித்தார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் 1940ம் ஆண்டு லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்குக் காரண மான மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார். இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டதாக நேச்சர் இதழ் 2003ல் அறிவித்தது. இன்று உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் 14. 2007 - மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் 2007ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாள் ஆகும். பை நாள் என்பது π என்னும் புகழ் பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். மார்ச் 15. முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) 1985ல் பதிவு செய்யப்பட்டது. சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா 2004ல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலக நுகர்வோர் தினம் எங்கும் கொண்டாடப்படுகின்றது.
எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கின்றது - பழமொழி. Obedience - to learn to obey good., Obedience - to obey The Divine is better. - The Mother. இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற் றையும் விட மேலான நிலையாகும். பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
Obedience - obey only the truth., Obedience - give success., Obedience - gives peace, progress, prosperity etc.....
Detailed Obedience
Perfect Obedience The Importance of Obedience "Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother. "Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth. In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo. Obedience.in explains The Mother - Bagawan Sri Aurobindo's teachings, Art of Sucessful Living, Social Welfare, Progress to All.....
இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னையின் கருத்துக்கள் மற்றும் படங்கள் அனைத்தும், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
| |||||||||||