அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதகுலம் முழுவதும் வாழ்நாள் முற்றும் சாந்தி, மகிழ்ச்சி, முன் னேற்றம், உயர்வு, புகழ், செல்வவளம், ஆரோக்கியம் முதலான அனைத்து வகையான நல்வளங்களையும் பெற்று என்றும் இனிதே வாழ வேண்டும் என பரம்பொருளான பகவான் ஸ்ரீ அரவிந்தர்-பராசக்தி ஸ்ரீ அன்னை ஆகியோரின் பொன்னொளி நிறைந்த பாத மலர்களில் பணிந்து பிரார்த்தனைகள் செய்கிறோம்.

 

'பணிவு அல்லது கீழ்படிதல்' எனும் பெயரில்  'obedience.in' என்ற இந்த இணைய தளமானது 15 ஆகஸ்ட் 2006ம் ஆண்டு முதல் செயல் ஆற்றி வருகின்றது.

ஸ்ரீஅன்னை - பகவான் ஸ்ரீஅரவிந்தர் ஆகியோரின் ஆன்மிக வழிகாட்டு தல்களை அனைவரும் அறிந்து வாழ்வில் உயர்வு பெறும் வண்ணம்  தத்துவங்களையும், கருத்துரைகளையும்  வெளியிட்டு வருகினறோம். ஒவ்வொரு மனிதரும் இதனை அறிந்து, உணர்ந்து இறை அருள் பெற்று வாழ்வில் உயர்வையும், இன்பத்தையும் பெறும் விதமாக ஒவ்வொரு மாதமும் 15ம் நாள் இதனை புதுப்பித்து வருகின்றோம்.

இந்த இணைய தளத்திற்கு வருகை தரும் அன்பர்கள் இறை அவதார ங்களின் வழிகாட்டுதல்களை ஏற்று செயல்பட்டால் அவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் மேலான உயர்வையும், முன்னேற்றத்தையும் தெய்வீக அருளானது கொடுக்கும் என்பது உறுதி.

''வாழ்வனைத்தும் யோகம்'' என்பதே பகவான் ஸ்ரீஅரவிந்தர் காட்டிய அருள் நெறியாகும்.  இவ்வுலகம் இறைவனின் படைப்பு, அதில் நமது பிறப்பு வெறும் மாய விளையாட்டு அல்ல, இறைவனது  செயல்களை அவனது கருவியாக இருந்து கர்மங்களைச் செய்து வாழ்வை நடத்தி முடிப்பதே மனித ஆன்மாவின் கடைமையும் இலட்சியமும் ஆகும்.

நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு சிறு சம்பவங்களும், நமது செயல்பாடுகள் முழுவதும் இறைவனால், இறைவனுக்காக நடத்தப்படு கிறது என்கிற சூட்சும உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்பம்-துன்பம் எல்லாமே அவன் அருளால் விளைபவைதான், நாம் வெறும் கருவிகள் மட்டுமே என்ற மெய் உணர்வு பெற வேண்டும். அவ்வாறு இருந்து நாம் வாழ்க்கையை விட்டு விலகி விடாமல், சமநிலை மாறாத மனநிலையுடன் வாழ்ந்து முடிப்பதே நாம் அடைய வேண்டிய வெற்றி இலக்கு ஆகும்.

 

நம்மால் எதையும் அறிய இயலாத, தீர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஸ்ரீஅன்னை-பகவானின் கருத்துக்கள் நமக்கு தெளிவைத் தந்து சரியான வழிகாட்டி நம்மை வழி நடத்திச் செல்லும். இதனால் நாம் பெரும் பாரமும், துன்புமும் இன்றி வாழ்க்கையை எளிதாக நடத்திச் செல்ல முடியும்.

''எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே''  என்பதே நம்மை வழி நடத்தும் இறை அவதாரங்களின் இலட்சியமும், யோக சாதனையின் வெற்றியும் ஆகும். நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்கள்' என்பதை உணர்ந்து கொண்டு உண்மையுடன் வாழ் ந்து, சத்தியத்தின் ஒளியில் நடந்து சென்று தெய்வீக வாழ்வு பெற்று இறவா நிலையை அடையலாம்.

தங்களது வாழ்வியல் முதலான அனைத்து வகையான குழப்பங்களுக்கும்  தக்க தீர்வு ஸ்ரீஅன்னை, பகவான் ஸ்ரீஅரவிந்தரின் அருள் மொழிகளில் உண்டு. இதனை அறிந்து சரியான வழிகாட்டுதல்களை பெற்று வளமும், நலமும் பெறலாம்.

தமிழ் தட்டச்சு செய்ய தெரியாத அன்பர்கள் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் பதிவாகும் எ.கலப்பை என்ற இலவச சாப்ட்வேரை இடதுபக்கம் காணப்படும் Fonts Download அல்லது இங்கு Fonts-e.kalappai Download கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து உபயோகித்து விவரங்களை தயாரித்து அனுப்பலாம்.

எங்களது இந்த சிறிய முயற்சி பற்றிய தங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தவறாமல் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு  தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம். 

 

ஸ்ரீஅன்னை-பகவான் ஸ்ரீஅரவிந்தர் பற்றிய தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு அனைவரும் இன்புற்று வாழ வழி காட்டலாம்.

''வாழ்க வையகம் வாழ்க வளமுடன்'' என்று பிரார்த்தனையுடன் நன்றி கூறி  விடை பெறுகிறோம்.  

e.mail : obedience.in@sify.com                                          obedience.in@gmail

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கின்றது - பழமொழி.

Obedience - To learn to obey is good.,

Obedience - To obey only the Divine is better – The Mother.

இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற்றையும் விட மேலான நிலையாகும்.  பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

Obedience - give success.,

Obedience - obey only the truth.,

Obedience - gives peace, progress, prosperity etc.....

Detailed Obedience
                                  The obedience to the Divine Will
                                  must be total. 
 

Perfect Obedience
                                   Without reserve or hesitation,
                                    joyous obedience in every sphere
                                   to the command of   the Divine.
 

The Importance of Obedience

"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother.

"Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth.

In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo. 

Obedience.in explains

The Mother - Bagavan Sri Aurobindo's teachings,

Art of Sucessful Living,

Social Welfare, Progress to All.....

இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ அரவிந்தர் -   ஸ்ரீ அன்னையின் கருத்துக்கள் மற்றும் படங்கள் அனைத்தும், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

 

இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.