வந்தே மாதரம்!

Obedience - to learn to obey is good.,          Obedience - to obey only the Divine is better - The Mother. 

மலர் - 4.     15 பிப்ரவரி 10.     இதழ் - 7.

 

 

ஸ்ரீஅன்னையின் பிறந்த தினம்  பிப்ரவரி 21ம் தேதி வருகின்றது. இன்று ஆசிரமத்தில் முக்கிய தரிசன நாள் ஆகும். இன்றைய தினம் காலை ஆறு மணிக்கு சமாதியைச் சுற்றி கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். இதில் உலகெங்கிலும் இருந்து வரும் ஆன்மிக அன்பர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று அளப்பறிய பலன் பெறுவார்கள்.

இதன் பின் தரிசனத்திற்கான அனுமதி அனைவருக்கும் கிடைக்கும். அன்று பராசக்தியான ஸ்ரீஅன்னையின் அறை, பகவான் ஸ்ரீஅரவிந்தரின் அறை ஆகிய இரண்டும் அன்பர்களின் தரிசனத்திற்காக திறந்துவைக்கப்படும். பூரணயோகம் செய்ய இப்பூமிக்கு இறங்கி வந்த இறைவனும், இறைவியும் வாழ்ந்து யோகம் செய்த இடங்களை தரிசிப்பதும், அங்குள்ள ஆன்மிக அதிர்வுகளை பெற்று உணர்வதும் உயர்வதும் விவரிக்க இயலாத பேருணர்வும், புண்ணியமும் ஆகும்.

கடவுளின் அருள் காலம், இனம், இடம் மதம் முதலான எல்லாவிதமான எல்லைகளையும் கடந்து செயல்படும். எதையும் நம்பிக்கையுடன் செய்யும் போது அந்தச் செயல்கள் எதுவும் பலனின்றி வீண் போனதில்லை.

 

அனைவரும் தெய்வீக வாழ்வைப் பெற வேண்டும் என இறைவனிடம் வருந்தி பிரார்த்தனை செய்து, பூரணயோகத்தை வெற்றி பெறச் செய்து இறை சக்தியை இவ்வுலகிற்குக் கொண்டு வந்தார் பராசக்தியான ஸ்ரீஅன்னை. அவரது கருணை அளவிடற்கரியது.

 

ஸ்ரீஅன்னையும், பகவானும் தம்மை வழிபடுவோர்களை என்றும் கை விடுவது இல்லை. நாம் அவர்கள் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அவர்கள் செலுத்தும் அன்பிற்கும், அருளுக்கும் குறைவு இருக்காது. எனவே அன்பர்கள் தங்கள் இடத்தில் இருந்தே இறை அவதாரங்களின் பேரருளைப் பெறலாம். நன்றி.

.

அன்னையிடம் பிரார்த்தனை செய்தால் அனைத்தும் கிடைக்கும்'' என்பது அனுபவ உண்மை. இதன் முழுமையான பொருளை உணர்ந்து கொள்ள நாம் சற்று நேர்மையுடன் வாழ முயற்சி செய்தால் போதும். மனிதனுக்கு  தேவையான அனைத்தும் அன்னையை வழிபடுவதனால் கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

பொதுவாக வழிபாடு என்பது சுய தேவைகளின் அடிப்படையில் அமைகின்றது. யாரும் பொதுநலத்திற்காகவும் அல்லது இறைவனை அறியவும், அடையவும் வேண்டி வழிபாடு செய்வது இல்லை. ஆனால் இது ஒரு தவறான நடைமுறை ஆகும்.

 

''மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் தருகிறேன், அவர்கள் தங்களது உண்மை நிலையை உணர்ந்து இறைவனை அறியும் நோக்கத்துடன் வழிபாடு செய்து வந்தால் அதிக மேன்மை அடையலாம்'' என்று அன்னை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்.

 

இதில் ஓர் உண்மை மறைந்து இருக்கிறது. நம்மைப் படைத்த இறைவன் நமது வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு சரியான விதத்தில், சரியான வேளையில் தந்து வருகின்றான். இது மாற்றம் எதுவும் இல்லாத சூட்சுமமான விதியாக இருக்கிறது.

 

இந்த உண்மையை நாம் அறியாததால்தான் நம்மனம் போன போக்கில் இவ்வுலக வாழ்வை நடத்தி வருகின்றோம். அதன் விளைவாகத்தான் சுயநலம் பெருகி மிக  மோசமான வாழ்க்கை முறையை மேற்கொள்கிறோம். இதனால் துன்பம் வரும் போது மட்டுமே கடவுளை நினைப்பது என்பது இன்று மனிதர் களுக்கு வாடிக்கையாகி விட்டது.

 

ஆனால் நாம் நினைக்காத போதும் நம்மைப் பற்றி நினைத்து நமக்குத் தேவையானவற்றை வழங்கி வாழ வைத்து வரும் இறைவனது மேன்மையான குணத்தை எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா? அல்லது அவனுக்கு நன்றிதான் கூறி இருக்கிறோமா?

 

சற்று சிந்தித்துப் பாருங்கள்! நம் வாழ்வில் நடப்பவை எல்லாம் நம் இஷ்டப்படிதான் நடக்கின்றதா? நமது கட்டுப்பாட்டில்தான் எல்லாம் இயங்கி வருகின்றதா? இதற்கு உன்மையாக, நேர்மையாக விடை அளிக்க முயன்றால் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமைப்பில் இறைவனை நம்பும் அனை வரும் பெயரளவுக்கு அவனை ஏற்றுக் கொள்ளாமல் முழுமையான மனதுடன் அவனைச் சரணடைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இதுவே நமது வாழ்க்கையை எவ்விதமான சிரமமும், பிரச்சனையும் இன்றி எளிதாக நடத்திச் செல்லக் கூடிய வழிமுறை ஆகும்.

 

ஏனென்றால் இத்தகைய வாழ்க்கை முறைக்கு நீங்கள் மாறும் போது இறைவன் முன்னைக் காட்டிலும் அதிக பொறுப்புடன் உங்களது வாழ்க்கைக்கு முக்கியத் துவம் தந்து வழிநடத்திச் செல்கிறான். அவனது இயக்கத்தில் இருக்கும் எல்லாம் உங்களது முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வழி செய்யும். இனி எத்தகைய எதிர்ப்பும், தடையும், கவலையும் உங்களை விட்டு விலகி ஓடி விடும்.

 

ஆகவே நீங்கள் நிலையான, நிஜமான, உயர்ந்த, அமைதியுடன் கூடிய வாழ்க் கையை பெற விரும்பினால் நேர்மையுடன் இறைவனது பாதத்தில் சரண் அடைந்து விடுங்கள். படைத்தவனுக்குத் தெரியாதா, உங்களுக்கு என்ன தேவை என்று? இந்த  புரிதலும், நம்பிக்கையும் வந்துவிட்டால் நமது அவசியமான, நியாயமான, உண்மையான தேவைகள் அனைத்துமே இறைவனால் நிறைவேற்றி வைக்கப்படும்.

 

இதுவே ஸ்ரீஅரவிந்த அன்னை காட்டும் எளிய வாழ்க்கை நெறி ஆகும். வாழ்வை சுமையாக இல்லாமல், இனிமை உள்ளதாக மாற்றும் அற்புத சக்தி இவ்வழிமுறை யைக் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும். இது உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பயன் தரக் கூடிய ஒரு பொதுவான வழிமுறை ஆகும்.

 

ஸ்ரீஅன்னையை அறிந்தவர்களும் அறியாதவர்களும், சமய, இனப் பாகுபாடின்றி  அவரிடம் நெருங்கி வந்து அருளைப் பெற்று உயர்வடைகின்றனர். ஆன்மாவில் தூய்மையும், சொல்லில் நேர்மையும் உள்ள எவரும் அன்னையை நெருங்கி வந்து அவரது வழிகாட்டுதல்களையும், உதவியையும், அருளையும் பெற முடியும்.

 

அன்னை தனது குழந்தைகளை தானே அவரவர் தகுதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து துக் வழி நடத்திச் செல்கிறார். அவரது அனுமதி இன்றி ஒருவரும் அவரை நெரு ங்கி விட முடியாது. அது போல கள்ளம் கபடம் நிறைந்த மனித ஆன்மாக்கள் அவரிடம் நீண்ட காலம் உறவு கொண்டு இருக்க முடியாது. தங்கள் தாழ்ந்த குணத்தால் அவரை விட்டு தாங்களாகவே விலகிச் சென்று விடுவார்கள்.

ஸ்ரீஅன்னை பகவானை நாடி வந்து பூரணயோகம் செய்ய நிரந்தரமாக பாண்டிச் சேரியில் தங்கியது இறைவனது செயல்பாட்டிற்கும், இலட்சியத்திற்கும்  கிடைத்த முழுமையான வெற்றியாகும். தீய சக்திகளுக்கு கிடைந்த மாபெரும் தோல்வியும் ஆகும்.

 

ஏனெனில் இவர்கள் இருவரும் இணைந்தே பூரணயோகத்தை முழுமையாக செய்து  முடிக்க முடியும். அதன் பயனாய் தெய்வீக வாழ்வு இப்பூமியில் நிலை கொள்ள முடியும். இறைவனது ஆற்றலான சத்திய ஜீவிய சக்தியை இப் பூமிக்கு கொண்டு வர இவர்களது யோகத்தால்தான் முடியும் என்பது மாற்ற முடியாத ஒரு உண்மையாகும்.

 

பொய்மை அன்னைக்கு ஒவ்வாத பண்பாகும். அதனை இருள் என்று குறிப்பிடு கின்றார். அதனை வெல்லும் மனிதர்களே சத்திய ஜீவிய வாழ்வு அதாவது தெய்வீகம் நிறைந்த ஆனந்த வாழ்வு பெற முடியும் என வலியுறுத்துகின்றார்.

 

பொய்மையும், ஏமாற்றுத்தனமும் நிரம்பிய இவ்வுலகில் நாம் தெளிவான மனது டன், தூய்மையுடன் வாழ்வது கடினம்தான். ஆயினும் அத்தகைய மனிதருக்கே அழிவற்ற தெய்வீக வாழ்வு காத்து இருக்கின்றது எனபது பலரும் உணராத ஒன்று.

 

நாம் இன்று முதல் உண்மையின் நிழலில் இருந்து நேர்மையின் வழி நடந்து உலக வாழ்வை வெற்றிகரமாகவும், ஆனந்தமாகவும் கழிப்போம். நாமும் உயர் ந்து பிறரையும் உயர்வடையச் செய்வோம். ஆர்வத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயம், அன்னையின் ஆசியும் நிச்சயம். வாருங்கள் நல்லுலகு படைப்போம், நலமுடன் வாழ்வோம்.

 

வாழ்வனைத்தும் யோகம்!

 

 

 

 

எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கின்றது - பழமொழி.

Obedience - give success.,

Obedience - obey only the truth.,

Obedience - gives peace, progress, prosperity etc.....

இறைவனின் வேலையாளாக இருப்பது உயர்ந்த தன்மைதான். ஆனால் அவனுக்கு அடிமையாக இருப்பது என்பது எல்லாவற்றையும் விட மேலான நிலையாகும். பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

Detailed Obedience
                                  The obedience to the Divine Will
                                  must be total. 
 

Perfect Obedience
                                   Without reserve or hesitation,
                                    joyous obedience in every sphere
                                   to the command of   the Divine. 
  

The Importance of Obedience

"Supreme Lord, Eternal Truth, Let us obey Thee alone and live according to Truth." - The Mother.

"Obedience is necessary so as to get away from one's own mind and vital and learn to follow the Truth.

In yoga obedience to the Guru or to the Divine and the law of the Truth as declared by the Guru is the foundation of discipline." - Sri Aurobindo. 

Obedience.in explains

The Mother - Bagavan Sri Aurobindo's teachings,

Art of Sucessful Living,

Social Welfare, Progress to All.....

 

இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னையின் கருத்துக்கள் மற்றும் படங்கள் அனைத்தும், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ட்ரஸ்ட்டின் முழு அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

 

இவற்றை வெளியிட அனுமதியளித்த ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.